Friday 25 June 2021

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் :

வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் !

முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே !


ஒரு வணிகம் செய்யலாம் என்று முடிவெடுத்தவுடன் ,அந்த வணிக வெற்றிக்கு என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வதே வணிகத்திற்கான மூலங்கள் ஆகும் . இது நீண்ட கால கொள்கையை நிறைவேற்ற நாம் எடுத்து கொள்ளும் திட்டங்கள் ஆகும் .

க( 1 )  : தமிழில் பெயர் சூட்டுதல்

மக்களுக்கான புரிதலை விதைப்பதே முதல் பணியாகும் .

உலகம் முழுக்க பிரபலமாக உள்ள தமிழ் தொழில் முனைவோர் சிலர் :

1. சரவண பவன் - திரு.பி.ராஜகோபால் 

2. நல்லி சில்க்ஸ் - நல்லி குப்புசாமி செட்டி 

3. சிக் ஷாம்பு ,Cavin kares - C .K .ரங்கநாதன் 

4. ராம்ராஜ் காட்டன் - K .R .நாகராஜன் 

5. ஹட்ஸன் ப்ரோக்ட்ஸ் - R .G.சந்திரமோகன் 


இவர்களை போல இன்னும் பலரும் , அப்பளம் ,ஊறுகாய் , வாகன உதிரி பாகங்கள் , என்று உலக அளவில் பல்வேறு உற்பத்தி பொருள்களை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சேர்த்து உள்ளனர் . இந்திய பங்கு சந்தையில் ,தங்கள் நிறுவன பங்குகளை விற்பனை செய்து முதலீடு சேர்க்கின்றனர் .

ஆனால் இவர்கள் எல்லோருமே ,தங்கள் உற்பத்தி பொருளுக்கான பெயரை முழுமையாக தமிழில் வைக்கவில்லை .அது அவர்களுடைய வியாபார யுக்தி என்று எண்ணி இருக்கலாம் .

ஆனால் , பொது மக்கள் மத்தியில் இவை தான் தமிழ்நாடு உற்பத்தி பொருள் என்ற அடையாளம் இல்லை . ஏனெனில் ஆங்கிலம் கலந்த பெயர்கள் இவை அனைத்தும் ! 

இது போலவே , ஆங்கிலம் கலந்த பெயர்களையே தான் சேட்டு மக்களும் தமிழ்நாட்டில் பயன்படுத்துகிறார்கள் .எனவே மக்களுக்கு வேறுபாடு தெரிந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளது . 

கடைக்கு உள்ளே நுழைந்து முகங்களை காணும் வரை , அந்த கடையின் உரிமையாளர் தமிழரா இல்லை வேறு மக்களா என்பதை கண்டு கொள்ளவே முடிவது இல்லை .

இதன் விளைவு , மக்கள் பிற மொழியாளர்களின்  பொருள்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள் . இதனால் நட்டம் , வணிகர்களுக்கே !

உ ( 2 ) : பொருள்களை இணைத்து விற்பனை செய்தல் .

அதாவது , ஒரு pizza ,kfc போன்ற வெளிநாட்டு உணவு கடைகளில் காம்போ என்ற பெயரில் பொருள்களை இணைத்து விற்பனை செய்வார்கள் . இது குறுக்கு வழி விற்பனை என்றே வழங்கப்படுகிறது . இது போன்ற கடைகளில் pizza மட்டும் தர மாட்டார்கள் . அதனுடன் சேர்த்து கோலா வும் தருவார்கள் .ஆனால் அது இலவசம் என்ற பெயரில் வரும். உண்மையில் பொருளுக்கான விலையில் கோலா வின் விலையும்  இணைக்கப்பட்டுள்ளது .

இந்த சந்தையிடுதல் முறையை ,அநேகமாக இன்றைக்கு உள்ள எல்லா வெளிநாட்டு நிறுவனங்களும் பின்பற்றுகின்றன .

சட்டை விற்பனை என்றால் இரெண்டாக தருவது , செல் போன் விற்பனையில் ,அதனுடன் இணைப்பொருள்களை வழங்குவது ,மாவரைக்கும் இயந்திரத்தில் சப்பாத்தி பிசையும் இயந்திரத்தை இணைப்பது , Mixer வாங்கும் போது ,அதில் ஜூசர் இணைத்து விற்பனை செய்யப்படுகிறது .

தற்சமய சூழலை பின்பற்றி கொண்டு , சில வெளிநாட்டு ஆடை நிறுவனங்கள் ,அந்த ஆடையின் நிறத்திற்கு ஏற்ற ( Mask ) முக அணியையும் சேர்த்தே விற்பனை செய்கிறது .

௩ ( 3 ) : ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப புதிய பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் வாடிக்கையாளரை தீர்மானித்தல் :

இது விற்பனையை தக்க வைப்பதற்கான மிக முக்கிய வழியாகும் .

ஒரு பொருளை விற்பனை செய்ய ஆரம்பித்தால் ,அது தொடர்பான எல்லா பொருள்களையும் விற்பனை செய்வது மட்டுமல்லாது , புதிய நடைமுறைக்கு ஏற்ற பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் .

உதாரணமாக , சிக் ஷாம்பூ நிறுவனர் , வெறும் ஷாம்பு விற்பனை செய்தவர் .காலத்திற்கு ஏற்ப , மக்களின் மனநிலைக்கு ஏற்ப , சிகைக்காய் கலந்து மீரா அறிமுகம் செய்தார் . பிறகு , முக அழகு என்பதில் மக்களின் கவனம் உள்ளது என்பதால் Fairever அறிமுகம் செய்தார் . தற்காலத்திற்கு ஏற்ப இப்போது புதியதாக Bacto -V ,என்ற பெயரில் பாக்டீரியா ,வைரஸ்களை அழிக்கும் தெளிப்பானை அறிமுகம் செய்துள்ளார் .இவர்கள் ஏற்கெனவே ஊறுகாய் ,தொக்கு போன்ற பொருள்களையும் அறிமுகம் செய்து உள்ளார்கள் .

நன்றாக கவனித்தால் தெரியும் , இவர்களின் பொருள்கள் அனைத்தின் வாடிக்கையாளரும் பெண்கள் தான் !

எனவே ,எந்த வணிகம் செய்தாலும் நமக்கான வடிக்கையாளர் யார் என்பதை முதலில் தீர்மானித்தல் மிக மிக அவசியம் .

இதுவே டிவிஎஸ் நிறுவனத்தை எடுத்து கொண்டால் ,அவர்களின் முக்கிய  வாடிக்கையாளர்கள் ஆண்கள் தான் !

௪ ( 4 ) : புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குதல் :

சாக்லேட் ,பிஸ்கட் போன்ற பொருள்களின் வாடிக்கையாளர்கள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் . அந்த நிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது . இதை வயது வந்தவர்களும் எடுத்து கொள்கிறார்கள் என்று விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதில் பதிவு செய்கிறார்கள் .அப்போது புதிய வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள் .

கடலை மிட்டாய் ,எள்ளு உருண்டை, தேங்காய் மிட்டாய்  போன்றவை உடலின் மீது அக்கறை உள்ள எல்லோரும் உண்ண வேண்டும் என்ற சமீபத்திய பிரசாரங்கள் , இவற்றிற்கான விற்பனை அளவை அதிகரித்து உள்ளது .

அது போலவே ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பு பெண்களுக்கும் பொருந்தும் வண்ணம் மாற்றி , பெண்களை புதிய வாடிக்கையாளராக பல்வேறு நிறுவனங்கள் பெற்றுள்ளன .

௫ ( 5 ) : எல்லா தரப்பு வாடிக்கையாளருக்கு ஏற்ப விலையை நிர்ணயித்தல் :

ஒரு வணிகத்தின் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக மட்டுமே இருந்தால் அது வணிகம் ஆகாது .

இந்த பணக்கார வர்க்கத்திற்கானது , நடுத்தர வர்க்கத்திற்கானது , என்ற பாகுபாடு இல்லாத நிலையில் , எல்லா தரப்பிற்கும் ,எல்லா வகையான பொருளும் போய் சேர்க்க வேண்டிய கடமை வணிகத்திற்கு உண்டு .


௬ ( 6 ) : பற்றாக்குறை இடங்களை கண்டறிதல் , புதிய சந்தைகளை உருவாக்குதல் :

ஒரு பொருள் விற்பனையில் எங்கு தேவை அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்வதும் , அங்குள்ள தேவைக்கு ஏற்ப விற்பனை உள்ளதா என்பதையும் கண்டறிவது அவசியம் ஆகும் .


௭ ( 7 ) : சிறந்த சேவை :

ஒரு நுகர்வோரை ,வாடிக்கையாளராக மாற்ற வேண்டியது , சிறந்த சேவையின் கையில் தான் பெரும்பாலும் உள்ளது . விற்பனை செய்வோர் , பொருள் சார்ந்த விளக்கம் அளிப்பது , பயன்படுத்தும் முறைகளை தெளிவு செய்வது போன்றவை மிக முக்கியம் .

அதை விட முக்கியம் நுகர்வோரை மரியாதையுடன் நடத்துவது .

தமிழ்நாட்டில் பல வெளிநாட்டு பொருள்கள் விற்பனை அதிகரிக்க மூலகாரணம் இந்த நுகர்வோர் சேவை தான் !

எல்லா தரப்பு நுகர்வோரையும் ,வாடிக்கையாளர் ஆக்க வேண்டுமே தவிர ஜாதி , மதம் பார்ப்பது வணிகத்தை பாதிக்கும் !இந்த ஒற்றை காரணம் தான் , பிற நாட்டின் பொருள்கள் தமிழ்நாட்டில் தங்கள் விற்பனையை பெருக்கி கொள்ள காரணமாயின .


வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் !

முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே !





Sunday 20 June 2021

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - Dettol Heros

 மிகச் சிறந்த சந்தையிடுதல் முறையை பின்பற்றும் RB என்று வழங்கப்படும்  Reckitt benckiser என்ற UK நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தை தான் இந்தியா . அதிலும் 2019 க்கு பிறகு கொழுத்த லாபம் பெற்றுள்ளது . காரணம் அந்த பெருந்தொற்று ! 

நமக்கு தெரிந்த மொழியில் சொல்ல வேண்டும் என்றால் டெட்டோல் கம்பெனி , ஹார்பிக் கம்பெனி , லைச்சொல் கம்பெனி என்று தான் நாம் சொல்ல வேண்டும் . இவை எல்லாமே இந்த பெருந்தொற்று காலத்தில் அதிக அளவில் பயன்படுத்த பரிந்துரைக்க பட்ட பொருள்கள் !


கடந்த சில ஆண்டைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு லாபம் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் 2019 ல்  CEO வாக பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற லக்ஷ்மண நாராயணன் நியமிக்கப்பட்டார் .

அவரின் அடுத்த சந்தையிடுதல் முறைமையின் முக்கிய பங்கு தான் , ஹீரோ க்களை டெட்டோல் லெபெலில் ஓட்டுவது .

இவ்வாறாக கிட்டத்தட்ட 5 லட்சம் ஹீரோக்கள் 2020 - 2021 ல் உருவாகி இருக்கிறார்கள் .அதனை பெருந்தொற்று காலத்தில் , உழைத்தவர்கள் என்றே கூற வேண்டும் .  எனவே அவர்களை கவுரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்வதாக கூறி கொண்டு , தனக்கான வாடிக்கையாளர்களை நிரந்தர படுத்துகிறது இந்நிறுவனம் .


வளர்ந்தது நோய் மட்டுமல்ல ! இது போன்ற பல நிறுவனங்களும் தான் ! 

இதன் மூலம் இந்நிறுவனங்கள் பெறும் லாபத்தால் நம் நாட்டிற்கு என்ன பயன் ? லாபம் முழுக்க இங்கிலாந்திற்கு செல்கிறது . அதன் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் .


நோய் வந்தால் , பிற நாட்டார் தான் இங்கு செல்வம் சேர்க்கிறார்கள் .

எனவே 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் !

உள்ளூர் பொருள்கள் உள்ளூர் செல்வதை பெருக்கும்!

உள்நாட்டு உற்பத்தி , வேலைவாய்ப்பும் , விளைபொருளும் குறைந்த விலையில் அள்ளி கொடுக்கும் !


பிற நாட்டு பொருள்கள் தவிர்ப்போம் !

நோயில்லா வாழ்வு பெறுவோம் !


=================================================

https://en.wikipedia.org/wiki/Johann_Benckiser


Reckitt Benckiser Place & Distribution Strategy:

Following is the distribution strategy of Reckitt Benckiser:

The company founder Johann Benckiser established the company in Pforzheim, Germany in 1823. The first overseas business was opened in Australia in 1886. Reckitt Benckiser is a global organization operational in nearly 60 countries and sales in 200 countries spread over 6 continents. Over 40000 employees are working for RB in these locations. In India, corporate operations of RB are located in Gurgaon, Haryana. The company has always focused on its core brands with emphasis on supply chain and distribution. For continuous innovation Reckitt Benckiser has R&D facilities located in 35 countries. Major facilities and based in India, Germany, Italy, China, Thailand and USA. This global network of experts works together for formulation of new products. They have planned to start newest Center for Scientific Excellence in Hull, United Kingdom in 2018. It is largest single investment for company with £105 millions


https://www.mbaskool.com/marketing-mix/products/17531-reckitt-benckiser.html





https://www.ndtv.com/business/reckitt-benckiser-names-pepsico-executive-laxman-narasimhan-as-next-chief-executive-officer-2051980



https://www.bseindia.com/markets/keystatics/Keystat_turnoverequity.aspx


Monday 14 June 2021

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்

 ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் என்பதை கொண்டாடும் இந்த உலகம் தான் , மூன்றாவது குழந்தை பெற்ற பெண்ணையும் ,ஆணையும் தரக்குறைவாக பேசுகிறது .

முதலில் பிரசவத்திற்கு வரும் பெண்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்துங்கள் என்று கூறலாம் , ஆனால் நாம் தான் வீட்டு பிரசவத்தை விட்டுவிட்டு அடுத்தவர் மருத்துவத்தை தேடி போனோம் !

அனுபவிக்கிறோம் !

( செவிலியர்கள் யாரும் திட்டுவதே இல்லை என்று கூறினால்  பெண்கள் பிரசவ நேரத்தில் நீங்கள் , மருத்துவமனை பக்கம் போனதே இல்லை என்று பொருள் ! ) 


https://www.dinamalar.com/news_detail.asp?id=2781466


எத்தனை குழந்தை பெற்றாலும் தாய்மை தானே !

அதென்ன முதல் குழந்தை என்றால் தாய்மை !

அதுவே மூன்றாவது குழந்தை என்றால் அசிங்கம் !

பிறகு அந்த காலத்தில் எங்க பாட்டி எல்லாம் 12 பிள்ளை பெத்துச்சி என்று அங்கலாய்ப்பு வேறு !

அந்த காலத்து பாட்டி 12 குழந்தை கூட பெற்று கொள்ளலாம் .அவளுக்கு சுதந்திரம் இருந்தது .இந்த காலத்தில் தான் 3 வது குழந்தை பெற கூட பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது . அதற்கு பெண்ணே , வருந்தும் அளவிற்கு வெட்கப்பட வைக்கும் கேள்விகள் வேறு !

கல்வி வளர்ச்சி ? வேளாண் குறைவா ?

 1947 ல் இந்தியாவில் கல்வி விகிதம் வெறும் 12 % இன்று 80% .எவ்வளவு வளர்ச்சி ?

திருத்தி எழுதுவோம் !
1947 ல் அவரவர் சமூகம் சார்ந்த , மண் சார்ந்த அறிவு கொண்டோர் 88%பேர் .
இன்று ஆங்கில கல்வி முறையால் ,மண் சார்ந்த அறிவு கொண்டோர் வெறும் 20 % என்று !


தமிழ்நாட்டில் உயர் கல்வி படித்தோர் விகிதம் இந்திய அளவிலான விகிதத்தை விட அதிகம் ! இதன் பொருள் ,

தமிழ்நாட்டில் வேளாண் செய்வோர் வெறும் 21 % என்று சுருங்கி விட்டது . நாம் இப்போதே உணவு பொருளுக்காக பிற மாநிலங்களை சார்ந்து வாழ்கிறோம் !



ஊருக்கு உபதேசம்

 நாம் இருவர் நமக்கு இருவர் , நமக்கு ஒருவர் , நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்றெல்லாம் கனரக வாகனங்களில் பல இடங்களில் பார்த்திருப்போம். உண்மையிலேயே 2016 ல் தான் அரசு , இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள வேண்டும் என்றால் அனுமதி கடிதம் பெற வேண்டும் என்பதை பற்றி பேசியே உள்ளது .இன்னும் அதுவும் நடைமுறையில் இல்லை .இன்றும் பீகார் , ராஜஸ்தான் ,மேற்கு வங்கத்தில் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்கிறார்கள் .

எனில் தமிழ்நாட்டில் யார் இதை பரப்பியது என்றால் ,'

பள்ளிகள் ,

3 வது குழந்தைக்கு மருத்துவமனைக்கு வரும் பெண்களை திட்டி தீர்க்கும் செவிலியர்கள் ,

வாடகைக்கு வீடு கொடுத்தோர் ,

நிறுவனங்கள் - 3 வது குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை என்றால் , மூன்றாவது குழந்தைக்கு விசா எடுப்படுப்பது உட்பட எதிலும் நிறுவனம் தலையிடாது .

நண்பர்கள் , 

நீயெல்லாம் படித்தவனா என்ற கேள்வி .

( தமிழில் சுத்தமாக பிடிக்காத ஒரே வார்த்தை இது தான் , நீயெல்லாம் படித்தவனா என்பது . சரியாக கேள்வி கேட்கணும் .ஆங்கில கல்வி வழிமுறையை சரியாக படித்தவனா என்று தான் கேட்கணும் . மக்கள் இனிமேல் இப்படி கேட்கட்டும் .அப்போ பதில் கிடைக்கலாம் .)

முக்கிய பங்கு சினிமாவிற்கு உண்டு .

திரைப்படங்கள் தான் மக்களுக்கு எல்லா அறிவையும் கொண்டு சேர்த்து ஆயுதம் !

இந்த குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்திய பின் , திருமணம் பற்றிய கேள்விகள் .

அரசே இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் 35 வயது என்று மாற்றும் என்று வைத்து கொள்ளலாம் .ஆனால் தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் அலப்பறைகள் இருக்கே !

அதனினும் மோசமாக போய் கொண்டு இருக்கிறது .

இப்போதைய நிலை .! ஊசி போட்டுட்டியா ?என்பது !

கடைசியில் கேட்பவர்களை நாமும் திருப்பி கேட்டால் , பதில் சொல்லாமல் திருப்பி கொண்டு செல்கிறான் . 


ஊருக்கு உபதேசம் 

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்

ஐந்திணைகள் இருக்கிறதாம் .மலை பகுதி, காடுகள்,வயல்கள்,கடல் என்றெல்லாம் இருக்கிறதாம் . இதில் உணவு முறைகள் வேறு வேறாக உள்ளதாம் .கடவுள் வேறு வேறாக உள்ளதாம் . கால நிலை வேறு வேறாக உள்ளதாம் . உண்ணும் உணவுகள் வேறு வேறாக உள்ளதாம் . 

இந்த உலகம் முழுக்க இப்படி தானே உள்ளது என்று கேள்வி கேட்டால் , ஆமாம் என்று கூறும் இந்த சமூகத்திற்கு , உலகம் முழுக்க எப்படி ஒரே நோய் , அதற்கு ஒரே மருந்து சாத்தியம் என்று கேட்டால் மட்டும் கோபம் வருகிறது .


சரி , நாம் ஐந்திணை பற்றி கூட பேச வேண்டாம். ஜி எது சொன்னாலும் நாம் எதிர்ப்போம் இல்லையா ? அந்த லாஜிக் படியாவது இந்த ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்பது எப்படி என்று கேள்வி கேட்கலாம் இல்லையா ? 

அதுவும் இல்லை .

அப்போ, தமிழில் உள்ளதெல்லாம் வெறும் வார்த்தைகள் தானா ?அது போலவே வடக்கை எதிர்ப்பதும் வெறும் பூச்சாண்டி வேலை தானா ?






Saturday 12 June 2021

எல்லாமே Just forward msg

 எங்கள் வீட்டிற்கு அருகில் ,ராஜஸ்தானி ,குஜராத்தி குடும்பங்கள் உண்டு .

இவர்கள் பெரும்பாலும் ,தங்கள் குழந்தைகளுக்கு பெரிய அளவில் கல்விக்கென்று செலவு செய்ய மாட்டார்கள் .அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் .

பிறகு வெகு நேரம் ,அந்த குழந்தைகள் , அவர்கள் தகப்பனார் செய்யும் தொழிலை கற்று கொள்கிறார்கள் .

தேர்வு மட்டும் எழுதுகிறார்கள் .குறைந்த மதிப்பெண் பற்றி அவர்கள் கவலை கொண்டதே இல்லை .10 ம் வகுப்பு முடிந்தவுடன் , நேரடியாக தந்தையின் தொழிலில் ஈடுபடுகிறார்கள் . மேற்படி படிக்க விரும்பினால், தொலை தூர கல்வியில் இணைந்து கொள்கிறார்கள் . பிறகு  எல்லா நேரமும் தொழில் ,அது சார்ந்த அனுபவ அறிவை பெறுகிறார்கள் .மூலப்பொருள்கள் வாங்குவது , வாடிக்கையாளரிடம் பேசுவது ,எந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மொழியை கற்று கொள்கிறார்கள் .

25 வயதிற்கு முன்னதாக திருமணம் .

வாழ்க்கை அடுத்த கட்ட நகர்வு நிகழ்கிறது .

ஆனால் ,நம்ம ஊர்களில் படித்தான் , படிக்கிறான், படிக்கிறான் , படிக்கிறான் எப்போது முடிப்பான் ,எப்போது வாழ்வாதாரம் தேடுவான் , எப்போது திருமணம் செய்வான் என்றால் , வயது 35 ஐ தொட்டு விடுகிறது .

நம் நாட்டின் கல்வியானது , பெரும்பாலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக forward Msg களாகவே உள்ளன .ஆங்கிலேயர்கள் காலத்தில் கொடுத்த கருத்துக்கள் அத்தனையும் இன்னும் ஆண்டுதோறும் கடத்தப்படுகிறது. 

6 ம் வகுப்பில் 2 பக்கங்களில் உள்ள விஷயம் , கல்லூரி முடியும் வரை இரண்டு இரண்டு பக்கங்களாக அதிகரிக்கிறதே தவிர , அதில் விஷயங்கள் மாறுவதே இல்லை .

தமிழ் பாடங்கள் கால்டுவெல் கொடுத்ததை Forward செய்கிறது .

வரலாற்று பாடங்கள் நீலகண்ட சாஸ்திரி கொடுத்ததை Forward செய்கிறது .

பொருளியல் பாடங்கள் ஆடம் ஸ்மித்திற்கு விளம்பரம் தருகிறது .

கணக்கியல் பாடங்கள் , லூகா பாசியோலின் பாடங்களை Forward செய்கிறது .

அறிவியல் , நியூட்டன் , ஐன்ஸடீன் , லவாய்சியர் போன்றோரை Forward செய்கிறது .

மருத்துவம் , மேற்கத்தியம் சொன்னதை Forward செய்கிறது .

நாம் என்ன படித்தாலும் , எவ்வளவு படித்தாலும் ஒரு சிறு கடையை கூட , படித்தவுடன் தொடங்க இயலாது . ஏனெனில் இங்கு எல்லாமே Just  forward msg மட்டுமே !


முன்பெல்லாம் ஒரு மாணவனின் வெற்றி , தோல்வி என்பது அந்த ஆசிரியருக்கே சொந்தம் .ஏனெனில் ஆசிரியர் தான் பாட திட்டங்களையே வகுப்பாராம் .அந்ததந்த சமூகத்திற்கு தேவையான கல்வியை ,அந்தந்த மண்ணிற்கு ஏற்ற கல்வியை அவரவரே தயாரித்து இருக்கிறார்கள் . எல்லா சமூகத்திலும் வாத்தியார் என்றொருவர் உண்டு . அவர் அந்த சமூகம் சார்ந்த பாடங்களை நடத்துவார் . அவர் குஸ்தி வாத்தியார் , குத்து வாத்தியார் , வாத்தியார் என்ற பெயரில் இருப்பார்கள் .

இன்று தான் நாம் , யாரோ ஒருவரின் பாட திட்டத்தை துரத்தி கொண்டு இருக்கிறோம் . 

எல்லா சமூகத்திலும் , வைத்தியம் என்ற ஒன்றில் இருந்து தான் கல்வி ஆரம்பம் ஆகிறது .


எந்த கல்வியானது உடலியல் கூறு மற்றும் அது சார்ந்த மருந்தொடு ஆரம்பிக்கவில்லையோ ,அது நமக்கான கல்வியே அல்ல !


மரபு வேளாண் தொழில் செய்து பழகு !

தமிழ் மருத்துவம் செய்து பழகு !

தொழில்நுட்ப அறிவையும் பழகு !  

இவையே நவீன வாழ்வியல் ஆதாரங்கள் !



கல்வி

 வைத்தியம் ,வாதம்,ஓகம் ,ஞானம் இதெல்லாம் இருந்தால் தான் அது கல்வி .

எல்லா கல்வியும் ,முதலில் மனிதனின் அடிப்படை தேவையாகிய உடலியல் மற்றும் அது சார்ந்த நோய்கள் , மருத்துவம் போதிக்க வேண்டும் .

இரண்டாவது , ஒரு கொள்கை இருந்தால் ,அதனை நிரூபிக்கும் திறமை வேண்டும்.

மூன்றாவது , யோகம் என்றால் காலம் கருதி செயலில் இறங்குவது . எப்போது ,எதை செய்ய வேண்டும் என்ற அறிவை பெறுவது .

நான்காவது , தெளிந்த அறிவால் , அடுத்து வரும் நிகழ்வுகளை கணிப்பது .

இதனை வழங்காத 

எப்படி கல்வி ஆகும் ?

உலகமயமாக்கல் - உள்ளூர் மக்களின் பயனுக்கு உதவாத பொருள்கள் .

 தஞ்சாவூர்ல நிறைய தென்னை மரங்கள் இருக்கு .இப்போ கூட மோதி ஜி ONE DISTRICT ONE PRODUCT திட்டம் போட்டு அதில் தஞ்சாவூரை தென்னைக்கு நேந்து விட்டுவிட்டார் .ஆனால் ,தஞ்சாவூரில் இளநீர் மிக குறைந்த இடங்களில் மட்டும் தான் கிடைக்கிறது .அதுவும் கூட கேரளா இறக்குமதி என்று கூறுகிறார்கள் .

இது போலவே , இங்குள்ள வெண்ணாற்றங்கரையில் கரையில் தான் மீன் பிடிக்கிறார்கள் .ஆனால், சந்தையில் விற்பது ஆந்திர மீன்கள் .

சாலைகள் தோறும் உளுந்து அடித்து காய வைக்கிறார்கள் .ஆனால் மளிகை கடைகளில் உளுந்து ,துவரை பற்றி கேட்டால் குஜராத் இறக்குமதி என்றே கூறுகிறார்கள் .

உண்மையில் விற்கப்படும் பல பொருள்கள் ,விளைவிக்கப்படுகின்றன .ஆனால் விற்பனையில் இருப்பது , உள்ளூர் விளைச்சல் இல்லை .


ஏன் ?


எங்கேயோ இருக்கும் மக்களுக்காக ஏற்றுமதி ஆகும் பொருள்கள் ,உள்ளூர் மக்களுக்கு கிடைப்பது இல்லை .

உலகமயமாக்கல் என்பது ,

உள்ளூர் மக்களுக்கு , தரமான பொருள்கள் கிடைக்காது என்றே பொருள் தருகிறது .



Friday 11 June 2021

படிப்பு முடித்தவுடன் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் .

 படிப்பு முடித்தவுடன் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் :


படிப்பு முடித்தவுடன் இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன .

* ஸ்விக்கி ,zomato ,Pizza , Dominos மற்றும் பல உணவு நிலையங்களில் டெலிவரி செய்யும் வேலை .

இதற்கு கொண்டு சேர்க்க பைக் வேண்டும் .சம்பளம் சுற்று வட்டார ஆர்டர்களை பொறுத்து 8000 முதல் 25000 வரை .

Risk Factor : வேகமாக வண்டி ஓட்ட வேண்டும் .


* ரிலையன்ஸ் போன்ற மளிகை கடைகளில் வேலைவாய்ப்பு .

இதற்கும் நல்ல சம்பளம் ,பைக் வேண்டும் .

Risk Factor : மெதுவாகவே பைக் ஓட்டலாம் .கொஞ்சம் குறைவான ரிஸ்க் தான் !


* ஐசிஐசிஐ போன்ற வங்கிகளில் பணம் கடன் கொடுக்க ,பணம் வசூலிக்கும் வேலை .

இதில் வேலை கிடைப்பதே கஷ்டம் .ஏனெனில் பணம் வசூலிக்க குரல் வளம் இருக்க வேண்டும் .


* LIC போன்ற காப்பீடு போன்ற நிறுவனங்களில் முகவர் வேலை .

இதற்கும் குரல் வளம் வேண்டும் .ஆனால் இங்கு பணிவான குரல்  வேண்டும் .வங்கி வேலை போல அதிர்ந்த குரல் வேண்டாம்.


* சுய உதவி குழுக்கள் மூலம் , பணம் கடன் கொடுப்பது ,பிறகு வசூலிப்பது ,பெண்களிடம் பேசும் முறை தெரிந்து இருந்தால் போதுமானது .


* மருத்துவமனை மற்றும் ஹோட்டல்களில் வரவேற்பறையில் பதிவு செய்யும் வேலை .


* மருந்து கடைகளில் கணக்கெழுதும் வேலை .

* அரிசி கடைகளில் , உணவகங்களில் கணக்கெழுதும் வேலை .

* Departmental Store களில் பொருள்களை கணக்கெடுப்பது மற்றும் கணக்கெழுதும் வேலை .

* துணி கடைகளில் வேலை .


இதை கடந்த சுய தொழில்கள் :

* ஆட்டோ ஓட்டுவது ,டாக்ஸி ஓட்டுவது ,

*  கடலை மிட்டாய் , ஊறுகாய் , போன்ற மிகச்சிறிய அளவில் சுய தொழில் செய்வது ,

* உணவகங்கள் நடத்துவது .

பெரிய அளவில் தொழில் நடத்த ,எல்லோருக்கும் அனுமதி கிடையாது .அதற்கான அணுகுமுறைகள் வேறு !


கேள்வி என்னவெனில் , மேற்காணும் தொழில்களில் எந்த தவறும் இல்லை .

உழைப்பு மதிக்க தக்கதே ! ஆனால் அதற்கு ஏன் நிறைய படிக்க வேண்டும் .?

இது போன்ற வேலைவாய்ப்புகள் மட்டுமே  உள்ள நாட்டில் பள்ளிகளும் ,கல்லூரிகளும், கல்வி ஒன்றே உன் தரத்தை உயர்த்தும் என்று கூறி கூறி ஏமாற்றி பிழைப்பு நடத்துவது மிக மிக வருந்த தக்க செயல் !



பில்கேட்ஸ் நடத்தும் பாடம்

 பில் கேட்ஸ் நமக்காக ஒரு பாடம் நடத்துகிறார் .அது என்னவெனில் ,

நிலங்களை உரிமை கொள்ள வேண்டும் !

மருத்துவமனைகளை அல்ல ,மருத்துவத்தை அதற்கு அடித்தளமாக உள்ள மருந்து உற்பத்தியையே கைக்கொள்ள வேண்டும் .

தகவல் தொழில் நுட்பத்தை வசப்படுத்தி கொள்ளவேண்டும் .

இவை மூன்றும் நவீன உலகின் நம்மை யாருக்கும் அஞ்சாமல் வாழச்செய்யும் முப்பெரும் கருவிகள் .

ஆனால் ,நாமோ விவசாய நிலங்களை விற்று , அதை கேவலமான தொழில் என்று பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

தமிழ் மருத்துவத்தில் நாமே மருந்து தயாரிக்கும் முறைகளை படிப்பறிவு , மேற்கத்திய அறிவுக்கு ஒத்து போகவில்லை என்று தவிர்த்து வருகிறோம்.

இன்று நாம் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்பம் முழுவதும் பிற நாடுகளின் சார்பு தன்மையில் இருக்கிறது . 








சுய பொருளாதாரம் - கொரோன - கருப்பு பணம் .


தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்தி மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் அழிகின்றன . இதை தடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம் .ஏனெனில் தொழில் வளம் என்பது மிக அவசியம் என்ற நிலைக்கு வந்து விட்டோம் .

சீனாவிலும் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டு இருக்கிறது .

ஆனால் அதனால் மறுபுறம் இன்னும் எத்தனை கொரோன வந்தாலும் அந்த நாடு தாங்கும் .ஏனெனில் உற்பத்தியும் ,முதலீடும்,உழைப்பும் என்று எல்லாம் அவர்களுக்கே சொந்தம் .

ஆனால் இந்தியாவில் உற்பத்தி நடக்கிறது .இயற்கை வளங்கள் அழிகிறது.உழைப்பு உறிஞ்சப்படுகிறது.கழிவுகள் பெறுகிறது.

ஆனால் ஒரு கொரோனாவிற்கே மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லை. ஏனெனில் எல்லா முதலீடும் அயல்நாட்டவருடையது .அவன் இங்கு முதல் மட்டும் தான் போடுகிறான்.உற்பத்தி செய்கிறான். மூலப்பொருள்களை மிக குறைந்த விலையில் அல்லது இலவசமாக பெறுகிறான்.உழைப்பையும் மிக குறைந்த விலையில் ( தொழிலாளர் சம்பளம் ) பெறுகிறான். மின்சாரம்,இடம்,நீர் என்று எல்லாம் நாடு இலவசமாக தருகிறது.உற்பத்தி பொருளை இங்கேயே அதிக விலைக்கு விற்கிறான் .போட்ட முதலை விட இரண்டு மடங்கு மும்மடங்கு பணத்தோடு நாடு திரும்புகிறான்.

அதனால் இங்கு பணப்புழக்கமும் ,பண மதிப்பும் குறைந்து கொண்டே போகிறது .இதன் விலை கிடுகிடு என்று உயர்கிறது .பண வீக்கம் ஏற்படுகிறது .ஆனால் அரசோ இந்த காரணங்களை மறைத்துவிட்டு பணவீக்கத்திற்கு கருப்பு பணம் தான் காரணம் என்று கதை கட்டும் .

இதன் விளைவு இங்கு ஒரு கொரோனாவிற்கே மக்கள் சிரமப் படுகிறார்கள் .

எனில் இங்கு வெளிநாட்டவரின் தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்திகளை விட மூல பொருள் எனும் விவசாய உற்பத்தி பெறுக வேண்டும் .நம் மக்களோ விவசாயத்தை தொலைத்து கொண்டு வருகிறார்கள் .

இங்கு வேளாண்மையும் போய்விட்டது.

இயற்கை வளங்களும் போய்விட்டது.

வேளாண்சார்ந்த அடிப்படை அறிவும் போய்விட்டது .

தமிழ்நாட்டில் கூட கடந்த காலங்களை விட வேளாண்மை செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது .வெறும் 

21% மக்கள் தான் இப்போது மூலப்பொருள் எனும் விவசாய உற்பத்தியில் இருக்கிறார்கள் .



சுய பொருளாதாரம் என்றால் ,ஆயிரம் கொரோன வந்தாலும் தாங்க வேண்டும் .

சுய பொருளாதாரம் - கொரோன - கருப்பு பணம் .

கல்வி பயன் -- வேலைவாய்ப்பு

கல்வியின் அடுத்த நிலை என்ன என்றால் எல்லோரும் கூறும் ஒரே பதில் வேலைவாய்ப்பு.

வேலை வாய்ப்பிற்காகத்தான் கல்வியா ? அறிவு வளர்ச்சிக்கு இல்லையா ? அறிவு வளர்ச்சிக்கு தான் கல்வி என்றால் ,கல்வியை முடித்தவுடன் ஒரு மாணவனின் அடுத்த முடிவு வேலை தேடி அலைவது அல்ல.முதலில் கல்விக்கான நோக்கத்தை மாற்ற வேண்டும் .காலம் காலமாக வேலை தேடி அலைவது ,அதை அரசு ஏற்படுத்தவில்லை என்று இந்த அரசை அந்த அரசு குறை சொல்வது ,அந்த அரசை இந்த அரசு குறை சொல்வது என்பதெல்லாம் ,ஆய்வாளர்களின் வேலையே அல்ல .அது அறிவார்ந்த சமூகத்தின் வேலை அல்ல. 

எந்த பாடத்திட்டங்களும் , ஒரு மாணவன் ஒரு பொருளை உருவாக்குவது பற்றியோ ,அதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றியோ கூறுவதே இல்லை .நியூட்டன் ,ஐன்ஸ்டின் என்று பாடம் நடத்த மட்டுமே உதவுகிறது .கிட்டத்தட்ட இது வாட்ஸாப் forward msg போலத்தான் இங்குள்ள பாடத்திட்டங்கள் உள்ளன .

ஒரு வணிகவியல் ,பொருளாதார பாடத்திட்டத்திலும் ,ஒரு தொழில் தொடங்கினால் என்னென்ன இடர்கள் வரும் ,அதற்கு வங்கியில் கடன் வாங்கலாம்,காப்பீடு செய்யலாம் என்று வங்கிக்கும் ,காப்பீடு நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் இருக்கிறதே தவிர ,ஒரு வணிகத்தை எப்படி ஆரம்பிப்பது என்று எந்த பாடமும் இல்லை .வேளாண் பொருளுக்கான நடைமுறைகள் பற்றியெல்லாம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

அறிவியல் பாடங்களில் மேற்கத்திய விஞஞானிகளின் அறிவு புகழ் பாடப்படுவது போல , வணிகவியல் ,பொருளாதார் பாடங்களில் மேற்கத்திய கணக்கு வழக்குகளை உலகம் முழுவதும் ஒரே மாதிரி கையாளுவது என்ற முறை தான் உள்ளதே தவிர , ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய நடைமுறை பாடங்கள் அங்கு இல்லை .

பிறகு எப்படி கல்வி பயன் தரும் ?


 





Thursday 10 June 2021

உற்பத்தியும் வளர்ச்சியும் !

 உற்பத்தியும் வளர்ச்சியும் 


நம் மண்ணில் ,நவீன அறிவியல் கல்வி என்பது , பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வில்லை.கழிவு இல்லாத ,மாசு இல்லாத அறிவியலாகவும் இல்லை .குறைந்த பட்சம் அதை படித்தவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிலையில் கூட இல்லை .பெரும்பாலும் பொறியியல் வரை படித்து விட்டு பலரும் அரசு தேர்வும் ,வங்கி தேர்வும் எழுதி கொண்டு இருக்கிறார்கள் .இந்த தேர்வுகளை எழுத எதற்கு அவ்வளவு வரை படிக்க வேண்டும் ? பெற்றோரின் உழைப்பை உரிந்து  கல்வி நிறுவனங்களை வளர்த்து விடவா ?

இந்தியாவில் இன்று அதிக அளவில் நடைபெறும் ஒரே ஒரு துறை சேவை துறை .

நாம் விவசாய துறையில் பின்தங்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

தொழில் துறை வளர வேண்டும் என்று கூறி கூறி தான் வேளாண் துறையை பின்னுக்கு தள்ளினோம் .ஆனால் தொழில் துறையும் ஒரு சில பணக்கார மனிதர்களை உருவாக்கி விட்டு ,மண்ணையும் ,இங்குள்ள வளங்களையும் அழித்துள்ளதே தவிர அதுவும் பெரிய அளவில் கணக்கில் இல்லை .

ஆனால் சேவை துறை வளர்ந்து வருகிறது .

இதற்கு எதற்கு ஆய்வு கல்விகள் ?

இதற்கு எதற்கு அறிவியல் கல்விகள் ?

இதற்கு எதற்கு இவ்வளவு பல்கலைக்கழகங்கள் ?

தொழில் துறை காட்டிய காரணம் போலவே , வேளாண்மைக்கு போனால் மீண்டும் அடிமையாகி விடுவான் .அதற்கு தான் கல்வி என்றெல்லாம் கூறினால் ,நாம் சேவை துறையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையை அடையவில்லை என்றே பொருள் தரும் .


ஒரு நாட்டில் உற்பத்தி பெருகினால் தான் அது வளர்ச்சி !

சேவை துறை பெருகினால் வேறு யாரோ வளர்க்கிறார்கள் என்றே பொருள் !

நம் மண்ணிற்கான கல்வி வராமல் , மேற்கத்திய கல்வியை வைத்து கொண்டு இங்கு என்ன மாற்றம் நிகழ முடியும் 

மாற்றம் கல்வியில் இருந்தே தொடங்க வேண்டும் .




1990 களில் , இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் சீனா வை விட அதிகம் .சீனாவின் தனிநபர் வாங்கும் திறன் 990 டாலர் .இந்தியாவில் தனிநபர் வாங்கும் திறன் 1190 டாலர்.


ஆனால் இன்று ,

சீனாவின் வாங்கும் திறன் 16790 டாலர்

இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் 6920 டாலர்


நமக்கு கீழ் இருந்த சீனா இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்து விட்டது .ஒரே காரணம் அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் .நாம் சேவை செய்கிறோம் .

நம் நாட்டில் சீனாவை போல் மூன்று மடங்கு பள்ளிகள் அதிகம் .

ஆனால் கல்வியின் தரம் என்ன ?

உற்பத்திக்கான கல்வியை தான் இங்கு வழங்குகிறார்களா ?

என்ன தொழில் கல்வி , அடிப்படை கல்வியிலே வழங்கப்படுகிறது என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது .

உற்பத்தியம் ,உற்பத்தி சார்ந்து ,கழிவு தராத அறிவியல் கல்வியும் தான் , ஒரு நாட்டின் அடிப்படை ஆதாரங்களாக இருக்க முடியும் .

எப்போதும் யாரோ ,எந்த நாட்டில் இருந்தோ இங்கு வந்து தொழில் தொடங்குவதும் ,அதில் இங்கு உள்ளவர்கள் வேலை பார்ப்பதும் தான் கல்வி தரும் மாற்றமா ?




காங்கிரஸ் இருந்தால் ,பிஜேபி இருந்தால் என்றெல்லாம் கட்சி சார்ந்து ஒரு நாட்டின் கல்வியும் ,உற்பத்தியும் ,வளர்ச்சியும்,மனித வள ஆரோக்கியமும்  இருக்கும் என்று எண்ணினால் ,நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் என்றே அர்த்தம் !

அடடே அர்த்தம் என்பது சம்ஸ்கிருத சொல் என்று கூறி கொண்டால் அதன் பெயர் மாற்றம் அல்ல .

கழிவு இல்லாத அறிவியல் , அதனால் வரும் உற்பத்தி ,கழிவு இல்லாத மருத்துவம் இதற்கு வழி தேடினால் தான் மாற்றம் !

https://statisticstimes.com/economy/country/india-gdp-sectorwise.php


https://datacommons.org/place/country/CHN?utm_medium=explore&mprop=amount&popt=EconomicActivity&cpv=activitySource%2CGrossNationalIncome&hl=en



Monday 7 June 2021

மொழி

 இரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன் .அதில் கன்னியாகுமரி ,நாகர்கோவில் ,மக்கள் தவிர பிறருக்கு மீன் குழம்பு வைக்கவே தெரியாது .என்று கூறி இருந்தார்கள்.

பிறகு ஒரு பதிவில் ,தென் மாவட்டங்களில் அகத்தி கீரை என்ற ஒன்றை சமைப்போம் .அது உடலுக்கு மிகவும் நல்லது என்று பதிவு செய்து இருந்தார்கள்.
இது போலவே மதுரை ஆண்கள் தான் வீரமானவர்கள் !
தஞ்சையில் மட்டும் தான் விவசாயம் நடந்தது.நடக்கிறது.

என்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்றே புரிய வில்லை.
இதே போலவே தமிழும் திண்டாடி நிற்கிறது.

தென்  மாவட்டத்தில் தான் தமிழ் தோன்றியது .
என்று அலட்டி கொள்ளும் யாரும் தமிழின் அறிவியல் பற்றி பேசுவதே இல்லை .முற்றிலும் அலோபதி மருத்துவம் தான் சிறந்தது என்று கூறி கொள்கிறார்கள்.


மொழிகள் சமகாலத்தில் இருந்திருக்கலாம்.
இன்று கிருஷ்ணகிரி மக்களின் மொழியும்,திருவண்ணாமலை மக்களின் மொழியும் ,குமரி மாவட்ட மக்களின் மொழியும் ,தஞ்சை மாவட்ட மக்களின்
மொழியும் ஓரளவிற்கு வேறுபடவே செய்கிறது.

இதில் காலப்போக்கில்,அவரவர் வாழும் இடத்திற்க்கு ஏற்ப உச்சரிப்பு மாறி இருக்கலாம் .

எனவே ஒன்றை விட ஒன்று உயர்ந்தது .இங்கு மட்டும்தான் எல்லாம் தோன்றியது என்று எண்ணினால் ,அது மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பயன்படாது.










நெய்

 நெய் இல்லா உண்டி பாழ்..

இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் தேன், எள், எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டிலும் பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது.
அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு, செல்விருந்தோம்பி, வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள், சங்க கால மக்கள்.
தலைவன்-தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும், பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும், புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர்.
பொருநர், பாணர், கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளுதவியும் அளித்தனர்.
இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவுப்பழக்கங்கள் குறித்து பாடத் தவறவில்லை.
அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம்.

குறிஞ்சி நிலத்தார் உணவு:-
சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர்.
பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீனும், நெய்யும், நறவையும் வாங்கிச் சென்றார்கள்.
நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது.
இவைமட்டுமின்றி, உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியும் உண்டனர்.
நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்;
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம்.
மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும், மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும்.
பாலை நிலத்தார் உணவு:-
பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர்.
தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர்.
விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்தனர். மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர்.

முல்லை நிலத்தார் உணவு:-
நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர்.
அதுவுமின்றிப் “பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்”.
தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர்.


மருத நிலத்தார் உணவு:-
நீர் வளமும் நில வளமும் நிறைந்த இந்நிலத்து மக்கள் கரும்பையும், அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் இறைச்சியையும் கள்ளையும் பெற்றனர்.
ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர்.
தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர்.
அவலை இடித்து உண்டனர்.
தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர்.


நெய்தல் நில மக்களின் உணவு:-
நெய்தல் மக்கள் கடல் இறால், வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர். பனங்கள், நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர்.
கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி, விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன.
ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது.
தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர்...
அரண்மனைகளில் நாவிற்குச் சுவையான உணவுடன், சுவையான கள்ளும் தரப்பட்டது.
உணவில் இனிப்புகள், முல்லையரும்பு ஒத்த அன்னம், பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும், கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன.
விருந்தின் முடிவில், குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது.
தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும், முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான்....


பல்வகை உணவுகள்:-

சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும், பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள், பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம், இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர்.
தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள், கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர்.
பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று, அங்கிருந்த எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள், பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன.
தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள், பலா, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர்.
எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள்:-
உளுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர். இக்காலத்து ‘வடாகம்’ போன்று அமைவது இது.
எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர்.
சோறு வேறு, ஊன் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு, ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம்.
செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி உண்டனர்.
அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர்.
இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர்.
கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர்.
பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர்.
பழஞ்சோறு, புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர்.
மட்பாண்டங்களில் சமையல் செய்தனர். உணவு உண்ணும்போது, சோற்றில் நெய் பெய்து உண்டனர்.
குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள்.
முற்றிய தயிரைப் பிசைந்தும், ‘புளிப்பாகன்’ எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள்.
பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர். பசி தீர விளாம்பழம் உண்டனர்.
மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார்.
கார் காலத்து மழை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர்.
மறவர், வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர்.
இறைச்சியுணவு தெவிட்டி வெறுத்தால், பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர்.
இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர். நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும், சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர்.
உழவர்கள் வாளை மீன் பொரியலுடன் பழைய சோற்றை உண்டனர்.
குடிவகை:-
சங்ககால மக்கள் பல்வேறு மூலப்பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர்.
தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள், தேக்கள், யவன மது தோப்பிகள், நறும்பிழி, குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும், கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர்.

பத்திய உணவு:
பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர். கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர். இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம்.
குழந்தை உணவு:
குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர்.
விரத உணவு:
பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர்.
இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும். காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
அறிவர் உணவு:
அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து உண்டனர். அதன்பின் ‘வெப்பத் தண்ணீர்’ அருந்துவர். இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர்.
கைம்மை மகளிர் உணவு:
கணவனை இழந்த பெண்டிரை ‘உயவர் பெண்டிர்’ ‘கழிகல மகளிர்’ என்று அக்காலத்தில் அழைப்பர்.
இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை. கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும், புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர். சிலர் அல்லி அரிசியை உண்பர்.
அந்தணர் உணவு:
பாற்சோறு, பருப்புச்சோறு, நெற்சோறு, மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர். அத்துடன் பலாப்பழம், வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர்.
உணவைச் சமைக்கும் முறை:
இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம்.
சங்க காலத்தும் ‘மடை நூல்’ என்னும் பெயரில் சமையற் கலை நூல் இருந்தது என்பதையும் அந்நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம்.
சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர்.
உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர். அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர். எனவே, அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது. சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர்.
பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது.
உண்ணும் முறை:
சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர்.
வெள்ளி, பொன் போன்ற கலங்களிலும் உண்டனர்.
சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர். உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர். இதனை “நாத்திறம் பெயர்ப்ப உண்டு” என்று புறநானூறு அழகுற விளக்கும்.
நன்றி: மூலிகை மணி



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...